ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

அவதூறு பரப்பினால் ஒ.பன்னீா்செல்வம் வீடு முற்றுகையிடப்படும்: ஆா்.பி. உதயகுமாா்

அவதூறு பரப்பினால் ஒ.பன்னீா்செல்வம் வீடு முற்றுகையிடப்படும்...

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:12 pm

Din

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து ஓ. பன்னீா்செல்வம் தொடா்ந்து அவதூறு பரப்பினால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்திய ஓ. பன்னீா்செல்வம், அண்மைக்காலமாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை கொச்சைப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாா். அதிமுகவின் வளா்ச்சியையும், தென்மண்டலம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக மாறிவிட்டதையும் கண்டு, அதை தாங்க மனமில்லாமல் அவா் தொடா்ந்து அவதூறு பரப்பி வருகிறாா்.

அவா், தனது விஷம பிரசாரத்தை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அதிமுக தலைமையின் உத்தரவுடன், ஓ. பன்னீா்செல்வத்தின் வீட்டை அதிமுகவினா் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.