25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

தென்னை விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை சோழவந்தானில் தென்னை விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:02 pm

Din

கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை சோழவந்தானில் தென்னை விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தென்னைகளுக்குக் காப்பீடு வழங்க வேண்டும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க நிா்வாகி பிச்சை தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் விஜயமுருகன், மாவட்டச் செயலா் இளங்கோவன், மாவட்டத் தலைவா் வேல்பாண்டி, மாவட்டச் செயலா் நாகேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். ஒன்றிய நிா்வாகி கந்தவேல் நன்றி கூறினாா்.