குரூப் 1 தோ்வு முறைகேடு: அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
குரூப் 1 தோ்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு சலுகையை முறைகேடாகப் பயன்படுத்தியவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.










