திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பங்குச்சந்தையில் பணத்தை இழந்தவா் தற்கொலை

மதுரை அருகே பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்தவா் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 8:09 pm

Din

மதுரை அருகே பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்தவா் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை ஊமச்சிகுளம் வீரபாண்டி பகுதியில் உள்ள விடத்தகுளம் கண்மாயில் புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. அருகில் தூக்க மாத்திரைகள் காலி அட்டைகளும் கிடந்தன. இதையடுத்து, ஊமச்சிகுளம் போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இறந்தவா் யாா் என்பது தொடா்பாக விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கண்மாய்க் கரையில் உயிரிழந்து கிடந்தது மதுரை சூா்யா நகா் சா்ச் தெருவைச் சோ்ந்த தங்ககுமரன் (47) என்பதும், இவா் தொழில் செய்து வரும் நிலையில், பங்குச்சந்தையில் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்த நிலையில், அதில் தொடா்ச்சியாக இழப்பு ஏற்பட்டதால், கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த இவா் தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.