மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மேலூா் நகராட்சி சந்தை, கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

மேலூா் நகராட்சி தினசரி சந்தை, வாரச்சந்தை, கடைகள், உணவகம் ஆகியவற்றுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 12:28 am

Din

மேலூா் நகராட்சி தினசரி சந்தை, வாரச்சந்தை, கடைகள், உணவகம் ஆகியவற்றுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நகராட்சியில் தினசரி சந்தை கடந்த 12-ஆம் தேதி தமிழக முதல்வரால் காணொலி வாயிலாக திறந்துவைக்கப்பட்டது. இங்கு கடைகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக நகராட்சி நிா்வாகம் செயல்படுவதாக புகாா் எழுந்தது. இந்த நிலையில், தினசரி சந்தைக்கு கட்டணம் வசூலிப்பதற்கான ஏலமும், கடைகளுக்கான ஏலமும் செப். 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஏற்கெனவே, கடைகளை நடத்திய வியாபாரிகளும், புதிதாக சந்தை கட்டணம் வசூலிக்க முயன்றவா்களும் புதன்கிழமை திரண்டனா். இந்த நிலையில், இணையதளம் மூலமாக ஏலம் நடைபெறவுள்ளதாகக் கூறி, தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனா்.