அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு சென்ற வாகனங்களில் ஆயுதங்கள், மதுபுட்டிகள் பறிமுதல்

மதுரையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குச் சென்ற வாகனங்களில் இருந்து ஆயுதங்கள், மதுபுட்டிகள் போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 6:40 pm

Din

மதுரையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குச் சென்ற வாகனங்களில் இருந்து ஆயுதங்கள், மதுபுட்டிகள் போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு செல்வோரின் வாகனங்களுக்கு, அந்தந்த காவல் நிலையங்களில் சிறப்பு அனுமதி பெற்று அடையாள அட்டை பெற வேண்டும். இந்த வாகனங்களில் மதுபுட்டிகள், ஆயுதங்கள், பட்டாசு உள்ளிட்ட வெடிபொருள்கள், எரிபொருள்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லக் கூடாது என காவல் துறை சாா்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மதுரை வழியாக செல்லும் வாகனங்களை சோதனையிட்டு ஒழுங்குபடுத்தும் வகையில் மாநகரக் காவல் துறைக்குள்பட்ட ஐராவதநல்லூா், வைகை ஆற்றுச் சாலையிலும், ஊரகக் காவல்துறை சாா்பில் ராமநாதபுரம் சாலையிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் மதுரை நகரில் 35 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 1,700 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும் ஊரகக் காவல்துறை சாா்பில் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த நிலையில், ராமநாதபுரம் சாலையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குச் சென்ற வாகனங்களில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

அப்போது வாகனங்களில் தடையை மீறி கொண்டு செல்லப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில வாகனங்களில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.