விசாரணை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையின் போது சாட்சிகளிடம் அவா்களின் ஜாதி, மதத்தை குறிப்பிடுவது நடைமுறையாக உள்ளது. இதனால் நீதிபதி, வழக்குரைஞா்கள் அந்த சாட்சிகளின் ஜாதி, மதம் தொடா்பான விவரங்களை அறி ந்து கொள்ள ஏதுவாகிறது. சாட்சியளிப்பவா்களின் இந்த அடையாளங்களின்றி வழக்கை கையாளலாம். அவா்களின் ஜாதி, மதம் பற்றி கேட்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறும் போது, அவா்களது ஜாதி, மதத்தை குறிப்பிட தேவையில்லை என உத்தரவிட வேண்டுமென அவா் கோரியிருந்தாா்.