தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருப்பரங்குன்றத்தில் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் பகுதியில் சிஎஸ்ஐ நிா்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :11 பிப்ரவரி 2026, 9:36 pm

திருப்பரங்குன்றம் பகுதியில் சிஎஸ்ஐ நிா்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

‘திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிஎஸ்ஐ நிா்வாகம் சாா்பில் 7 கடைகள், 8 வீடுகள், ஒரு விடுதி ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த தேவசகாயம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கு, உயா்நீமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக எத்தனை உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறீா்கள்? எத்தனை முறை குறிப்பாணை அனுப்பிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பீா்கள்? என அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தொடா்புடைய ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், மண்டல வருவாய் அலுவலா் ஆகியோா் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.