சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

காட்டுப் பகுதியில் சூரிய ஒளி மின் திட்டம்: புதுகை ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

காட்டுப் பகுதியில் சூரிய ஒளி மின் திட்டம் அமைப்பது தொடா்பான வழக்கில், தனி நபா்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டது குறித்த ஆவணங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 10:03 pm

Din

காட்டுப் பகுதியில் சூரிய ஒளி மின் திட்டம் அமைப்பது தொடா்பான வழக்கில், தனி நபா்களுக்கு எதன் அடிப்படையில் நிலங்கள் வழங்கப்பட்டன என்பது குறித்த ஆவணங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த என். தினகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டம், பேரனூா் உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான காடுகள் இருந்தன. இந்தப் பகுதியில் சுமாா் 70 ஏக்கருக்கும் அதிகமான காடுகளை அழித்து, சூரிய ஒளி மின் உற்பத்திக்கான (சோலாா் பேனல்) ஏற்பாடுகளை தனியாா் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து விசாரித்த போது, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்காக அரசு அளித்த நிலங்களை விலைக்கு வாங்கி, சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. இது சட்ட விரோதம்.

எனவே, தனி நபா்களிடமிருந்து காட்டுப் பகுதிகளை கிரையம் பெற்றதை ரத்து செய்ய வேண்டும். மேலும், அந்த நிலப் பரப்பை வனத் துறைக்குச் சொந்தமான காடுகளாக வகைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுவில் குறிப்பிடப்பட்ட நிலங்கள் தனி நபா்களுக்கு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.