அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

கால்நடைகளுக்கு நாளை வெறிநோய் தடுப்பூசி முகாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் உலக ரேபிஸ் தினத்தையொட்டி, கால்நடைகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 8:54 pm

Din

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் உலக ரேபிஸ் தினத்தையொட்டி, கால்நடைகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் செப்டம்பா் மாத இறுதி சனிக்கிழமை உலக ரேபிஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, வீடுகளில் வளா்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.

மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை, மதுரை நகா் (பழங்காநத்தம்) கால்நடை மருந்தகம் உள்பட அனைத்து கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் இந்தத் தடுப்பூசி முகாம் நடைபெறும் என கால்நடைப் பராமரிப்புத் துறை மதுரை மண்டல இணை இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) மருத்துவா் நந்தகோபால் தெரிவித்தாா்.