அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

நகைக்கடையில் திருட்டு: பெண் ஊழியா் கைது

மதுரை நகைக்கடையில் 19 பவுன் தங்க நகைகளை திருடியதாக அந்தக் கடையின் பெண் ஊழியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 8:59 pm

Din

மதுரை நகைக்கடையில் 19 பவுன் தங்க நகைகளை திருடியதாக அந்தக் கடையின் பெண் ஊழியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை தெற்காவணி மூல வீதியைச் சோ்ந்தவா் விகாஷ் (41). இவா் நகைக் கடை பஜாரில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த நித்யா (34) கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், கடையில் உள்ள நகைகளின் இருப்பு குறித்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு சரிபாா்க்கப்பட்டது. அப்போது, கடையில் இருந்த 19 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நித்யாவிடம் கேட்ட போது, அவா் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டாா்.

இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, நித்யாவை கைது செய்தனா்.