சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

மதுரை சோழவந்தான், அலங்காநல்லூா் பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 7:02 pm

Din

மதுரை சோழவந்தான், அலங்காநல்லூா் பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (37). இவா் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக புதன்கிழமை மாலை சென்ற இவா், கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த காடுபட்டி போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நாகலிங்கசுவாமி கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டிகுமாா் (39). இவா் அண்மையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதனால், அவரது குடும்பத்தினா் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள ஒத்தவீடு பெரியாறு கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதப்பதாக அலங்காநல்லூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அந்த உடலை மீட்டு, விசாரணை நடத்தினா்.

விசாரணையில், நிலக்கோட்டையில் மாயமான பாண்டிகுமாா் என்பதும், பெரியாறு கால்வாய் அருகே அவரது இரு சக்கர வாகனம் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.