சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த சரவணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் தெரு நாய்களை முறையாகக் கட்டுப்படுத்தவில்லை. இதனால், சிறாா்கள், பெரியவா்கள் நாய்கள் கடியால் பாதிக்கப்படும் நிகழ்வு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களையும், கால்நடைகளையும் கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு: முதியோா், பெண்கள், சிறாா்கள் தெரு நாய்களால் கடிக்கப்பட்டு, பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், சாலைகளில் கால்நடைகள் திரிவதைத் தடுக்கவும் உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியா்கள் உள்பட தொடா்புடயைத் துறைகளின் உயா் அலுவலா்களுக்கு தலைமைச் செயலா் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: போக்குவரத்து முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பேராவூரணி சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

ஈரானில் பணியாற்றியவரை மீட்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

