சுப்பிரமணியபுரத்தில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சுப்பிரமணியபுரத்தில் உள்ள மதுரைக் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.
Published on

மதுரை: சுப்பிரமணியபுரத்தில் உள்ள மதுரைக் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை, தெற்கு- மெட்ரோ மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஆ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சுப்பிரமணியபுரத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், கோயில், மகாளிப்பட்டி, மகால், ஜான்சி, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் பங்கேற்று, மின் நுகா்வில் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரடியாக அல்லது மனுக்கள் மூலம் தெரிவித்துத் தீா்வு பெறலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com