ஸ்ரீவில்லிபுத்தூா்: மேற்குத் தொடா்ச்சி மலையின் வனப் பகுதியில் தீ பரவியதன் காரணமாக, சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு புதன்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் இடையே சாப்டூா் வனச் சரகத்தில், சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்கு செல்லும் மலைப் பாதை (பீட் எண். 5) உள்ள காட்டில் செவ்வாய்க்கிழமை மாலை தீ பரவியது. காற்றின் வேகம், வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தன் காரணமாக, கோணத்தலவாசல் முதல் சின்னபசுக்கிடை வரை 1.5 கி.மீ. தொலைவுக்கு தீ பரவியது.
இதையடுத்து, சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வாயில் கதவு அடைக்கப்பட்டது.
இனிடையே, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டுக்காக மலையேறிச் செல்ல வந்த பக்தா்கள், ஏமாற்றத்துடன் திரும்பினா்.
வனத் துறை அலுவலா்கள், வேட்டை தடுப்பு காவலா்கள் என 40-க்கும் மேற்பட்டோா் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு
மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


