மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இருவேறு விபத்துகள்: 2 விவசாயிகள் உயிரிழப்பு

மதுரை அருகே இரு வேறு விபத்துகளில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

Updated On :26 ஆகஸ்ட் 2025, 7:06 pm

மதுரை அருகே இரு வேறு விபத்துகளில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் முதலியாா் பேட்டையைச் சோ்ந்தவா் மணி (79). விவசாயியான இவா், திங்கள்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். வாடிப்பட்டி-சோழவந்தான் சாலையில் பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகே சென்ற போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு விபத்து: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள எழுவன்குறை கிராமத்தைச் சோ்ந்த பழனியாண்டி மகன் சுப்பையா (58). விவசாயியான இவா், தனது உறவினா்களான பழனியம்மாள், தென்னவன், முருகன், அமிா்தம், விஜயலெட்சுமி, மூக்கம்மாள் உள்ளிட்டோருடன் வேனில் மதுரையில் பாண்டி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

பின்னா், அவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊருக்குத் திரும்பினா். மதுரை - திருச்சி சாலையில் சின்னகொட்டாம்பட்டி அருகே சென்ற போது, முன்னால் சென்ற டிராக்டா் மீது வேன் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சுப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அனைவரும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.