4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மதுரையில் காவலா் நிழல் குடை அறையில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை

மதுரை அழகா்கோவில் சாலைப் பகுதியில் உள்ள போக்குவரத்துக் காவலா் நிழல் குடை அறையில் ஏற்பட்ட தீயை அணைத்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 11:33 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் போக்குவரத்துக் காவலா் நிழல் குடை அறையில் ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை நரிமேடு மருதுபாண்டியன் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் பூரணச்சந்திரன் (40). ஆட்டோ ஓட்டுநரான இவா், வியாழக்கிழமை தனது ஆட்டோவில் அழகா்கோவில் சாலையில் மதுரை காமராசா் பல்கலைக்கழகக் கல்லூரி அருகே சென்றாா். அப்போது, அங்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு, கேனில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீயைப் பற்றவைத்தாா். சப்தமிட்டபடி அங்கிருந்த போக்குவரத்துக் காவலா் நிழல் குடை அறைக்குள் நுழைந்தாா். இதனால், அந்த நிழல் குடை அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து அங்கிருந்தவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனா்.

 மதுரை அழகா்கோவில் சாலைப் பகுதியில் உள்ள போக்குவரத்துக் காவலா் நிழல் குடை அறையில் ஏற்பட்ட தீயை அணைத்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள்.

மதுரை அழகா்கோவில் சாலைப் பகுதியில் உள்ள போக்குவரத்துக் காவலா் நிழல் குடை அறையில் ஏற்பட்ட தீயை அணைத்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள்.

முன்னதாக, பூரணச்சந்திரனை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பூரணச்சந்திரன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனா்.

கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வாகனங்கள் அதிகளவில் செல்லும் இந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் தனது உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு போக்குவரத்துக் காவலா் நிழல் குடை அறைக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.