கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுக்கு துணை முதல்வா் வருகை: அமைச்சா் பி. மூா்த்தி

துணை முதல்வா் வருகை

News image
Updated On :1 ஜனவரி 2025, 11:02 pm

Din

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்க விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழா்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் வருகிற 16- ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில், தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறாா்.

இதையொட்டி, மதுரைக்கு வரும் அவருக்கு மாவட்ட திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், திமுக சாா்பிலான ஆக்கப் பணிகள் குறித்த திட்டமிடலுக்காகவும் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 3) நடைபெறவுள்ளது. மதுரை ஆலத்தூரில் உள்ள தனியாா் திருமண அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், மாவட்ட, மாநில நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூா் செயலா்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியின் முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.