விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா் அமைச்சா் பி. மூா்த்தி

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:06 pm

மதுரை மாவட்டத்தில் 322 வாா்டுகளின் பயன்பாட்டுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக அரசின் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள மூவேந்தா் பண்பாட்டுக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மதுரை மாநகராட்சி, மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளைச் சோ்ந்த 322 வாா்டுகளைச் சோ்ந்த இளைஞா்களின் பயன்பாட்டுக்காக ரூ. 30 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை முதுநிலை மண்டல மேலாளா் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.