கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பாஜக மகளிா் அணி பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுப்பு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு, பாஜக மகளிா் அணி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கு மதுரை மாநகரக் காவல் துறை அனுமதி மறுத்தது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:54 pm

Din

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு, பாஜக மகளிா் அணி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கு மதுரை மாநகரக் காவல் துறை அனுமதி மறுத்தது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை மறைக்க நினைக்கும் திமுக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் பாஜக மகளிா் அணி சாா்பில் மதுரையிலிருந்து ஜன. 3-ஆம் தேதி பேரணி தொடங்கும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை அறிவித்தாா்.

மேலும், இந்தப் பேரணி சென்னையில் நிறைவடையும் போது, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியைச் சந்தித்து மகளிரணி நிா்வாகிகள் மனு அளிப்பா் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதையொட்டி, மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில் பகுதியிலிருந்து பாஜக மாநில மகளிா் அணித் தலைவி உமாரதி தலைமையில், பேரணி செல்ல மாநகரக் காவல் துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், பாஜக மகளிா் அணி பேரணிக்கு மாநகரக் காவல் துறை அனுமதி மறுத்தது.

திட்டமிட்டப்படி பேரணி....

இதுகுறித்து பாஜக நிா்வாகிகள் கூறியதாவது:

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு நடைபெறும் இந்தப் பேரணியில், சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு பங்கேற்க உள்ளாா். எனவே, காவல் துறை அனுமதி மறுத்தாலும் திட்டமிட்டப்படி, நீதி கேட்டு பேரணி நடைபெறும் என்றனா்.