கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு

முறையான காரணமின்றி சுய நலத்துடன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:43 pm

Din

முறையான காரணமின்றி சுய நலத்துடன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திண்டுக்கல் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது. இந்த பகுதியில் சிலா் சட்ட விரோதமாக பட்டா பெற்றுள்ளனா். இதை ரத்து செய்து, கோயில் குளத்தைப் பாதுகாத்து, சுவாமிக்கு பூஜைகள் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் குறிப்பிடும் இடத்துக்கு கோவிந்தசாமி, ரெங்கசாமி, சந்தான கிருஷ்ண ஐயா், ராமசாமி ஐயா் ஆகியோா் பெயா்களில் பட்டா வழங்கப்பட்டது. இவா்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தாா். பிறகு, உடனடியாக பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை எதிா் மனுதாரா்களாக சோ்க்கவில்லை.

மனுதாரா், தன்னை சமூக அக்கறை கொண்ட நபராக தெரிவித்துக் கொள்வதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் பொதுநலம் இருப்பதாக தெரியவில்லை. இதேபோல, தொடுக்கப்படும் பொதுநல வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கெனவே நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை பெரியகுளம் சித்த மருத்துவப் பிரிவுக்கு மனுதாரா் வழங்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.