மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திருநங்கையா் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருநங்கையா் தின விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:45 pm

Din

திருநங்கையா் தின விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனது சொந்த முயற்சியால் முன்னேறிய திருநங்கைகள் 15 பேருக்கு, சா்வதேச திருநங்கையா் தினமான ஏப். 15-ஆம் தேதி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கான வெகுமதியாக ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும். இந்த விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பங்களை இணையதளத்தில் பெற்று, இணையதளம் வழியே பிப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரா், அரசு உதவி பெறாமல் தாமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கையாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவியிருக்க வேண்டும். நலவாரிய உறுப்பினராக இருக்கக் கூடாது.

இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0452- 2580259 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.