எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அரசுப் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 20 போ் காயம்!

சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.

News image
மதுரை சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வெள்ளிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து.
Updated On :31 ஜனவரி 2025, 10:20 pm

Din

சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு அரசு நகரப் பேருந்து வெள்ளிக்கிழமை பகலில் புறப்பட்டுச் சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா். பேருந்தை ஓட்டுநா் பிரேம்குமாா் ஓட்டிச் சென்றாா். சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே சென்ற போது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

மதுரை சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வெள்ளிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து.

மதுரை சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வெள்ளிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து.

இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியினா் உதவியுடன் சோழவந்தான் காவல் துறையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விபத்தில் காயமடைந்த பயணிகள் சோழவந்தான் அரசு மருத்துவமனையிலும், மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.