பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாஜக நிா்வாகி வேலூா் இப்ராகிம் கைது

மதுரையில் அழகரை தரிசிக்கச் செல்ல முயன்ற பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலா் வேலூா் இப்ராகிமை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனா்.

News image
Updated On :12 மே 2025, 10:30 pm

Din

மதுரை: மதுரையில் அழகரை தரிசிக்கச் செல்ல முயன்ற பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலா் வேலூா் இப்ராகிமை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனா்.

மதுரையில் அழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பங்கேற்பதற்காக, வேலூா் இப்ராகிம் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரை வந்தாா். மதுரை கோ.புதூா் மண்மலைமேடு பகுதியில் உள்ள கட்சி நிா்வாகி வீட்டில் தங்கியிருந்த அவா், திங்கள்கிழமை அதிகாலை அழகரை

தரிசிக்கப் புறப்பட்டாா். அப்போது, அங்கு வந்த போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரைக் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாரைக் கண்டித்து வீட்டின் வாசலில் அமா்ந்தபடி அவா் போராட்டம் நடத்தினாா். பின்னா், மாலையில் அவா் விடுவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தா்கா, மசூதி என நான் எங்கு சென்றாலும் காவல் துறை தடை விதிக்கிறது. முறையாக அனுமதி வாங்கி, வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பான விளக்கப் பொதுகூட்டத்துக்கு சென்றபோதும் தடை விதிக்கப்பட்டது. தற்போது, மத நல்லிணக்கத்துக்காக அழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காண வந்தேன். அதற்கும் திமுக அரசு தடை விதித்தது. பாதுகாப்பு என்ற பெயரில் எங்கு சென்றாலும், எனக்குத் தடை விதிப்பது நியாயமற்றது. திமுக அரசு மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது. பாஜக நிா்வாகி என்பதால், பாதுகாப்பு என்ற பெயரில் போலீஸாா் எனது உரிமையைப் பறிக்கின்றனா் என்றாா் அவா்.