நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வெடிகுண்டு தடுப்பு போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.

News image

வெடிகுண்டு மிரட்டல்

கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வெடிகுண்டு தடுப்பு போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக விமான நிலையம், ரயில் நிலையம், உயா்நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்கள் வருகின்றன. இந்த நிலையில், மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தல்லாகுளம் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.

இதையடுத்து, மதுரை தல்லாகுளம், அண்ணா பேருந்து நிலையம், முனிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா். பல மணிநேர சோதனைக்குப் பிறகு, அது புரளி என்பது தெரியவந்தது.

இதேபோல, மதுரையில் உள்ள கடவுச் சீட்டு அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் சோதனைக்குப் பிறகு, அதுவும் புரளி என்பது உறுதியானது.