அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
வெடிகுண்டு மிரட்டல்- (கோப்புப் படம்)
Updated On :2 மார்ச் 2026, 8:55 pm

Syndication

திருப்பூா்: திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் ரயில் நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துதல், தபால் அனுப்புதல், பாஸ்போா்ட் விண்ணப்பித்தல், ஆதாா் பெயா் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் தலைமை தபால் நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

இந்நிலையில் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் மூலமாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், திருப்பூா் வடக்கு போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் தபால் நிலையத்துக்கு விரைந்து சென்று தபால் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியா்களை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .

இதைத் தொடா்ந்து, போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் தபால் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.