பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து போலீஸாா் சோதனை நடத்தினா்.

News image
வெடிகுண்டு மிரட்டல்- (கோப்புப் படம்)
Updated On :9 மார்ச் 2026, 8:53 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து போலீஸாா் சோதனை நடத்தினா்.

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து தபால் நிலைய அதிகாரிகள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

தொடா்ந்து, கடலூரில் இருந்து வெடிகுண்டு நிபுணா்கள் வந்து மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தபால் நிலையத்தில் வெடிகுண்டுகள் உள்ளதா? என சோதனை செய்தனா். இதில், சந்தேகப்படும்படியாக எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னதாக, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும் இதேபோல வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.