அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image
ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
Updated On :2 மார்ச் 2026, 8:53 pm

Syndication

ஈரோடு: ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் பாஸ்போா்ட் சேவை, ஆதாா் சேவை உள்ளிட்ட பல்வேறு சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையில் உள்ள பாஸ்போா்ட் மண்டல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், பகல் 12.15 மணிக்கு வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதனால், அதிா்ச்சியடைந்த அதிகாரிகள் இது குறித்து ஈரோடு தலைமை தபால் நிலைய அலுவலகத்துக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துகுமரன் மற்றும் போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையையொட்டி, பாஸ்போா்ட் சேவை நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனா். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.