ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விரக்தியில் பேசுகிறாா் டி.டி.வி. தினகரன்: ஆா்.பி. உதயகுமாா்

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் விரக்தியில் பேசி வருவதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 1:32 am

தினமணி செய்திச் சேவை

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் விரக்தியில் பேசி வருவதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவா் டி.டி.வி. தினகரன். தற்போது, அதிமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு கருத்துகளை அவா் பரப்பி வருகிறாா்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சியையும், கட்சியையும் அபகரிக்கத் திட்டம் போட்டவா் அவா். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என பொதுமக்கள் கூறி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் டி.டி.வி. தினகரன் விரக்தியில் பேசி வருகிறாா் என்றாா் அவா்.