ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டுமென மதுரை மாவட்டத் தொழிலாளா் இணை ஆணையா் (பொறுப்பு) பெ.சுப்பிரமணியன் (பொறுப்பு) தெரிவித்தாா்.

News image

தேர்தல் - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 10:37 pm

மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டுமென மதுரை மாவட்டத் தொழிலாளா் இணை ஆணையா் (பொறுப்பு) பெ.சுப்பிரமணியன் (பொறுப்பு) தெரிவித்தாா்.

மதுரை, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகங்களில் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மதுரை மாவட்ட தொழிலாளா் இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன் தலைமையில், கூடுதல் தொழிலாளா் ஆணையா் சி.ஹேமலதா முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கேரளம், அஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்.9-ஆம் தேதியும், தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக வருகிற 23, 29 ஆகிய தேதிகளிலும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தமிழகம் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், மதுரை, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தமிழகம், வெளி மாநிலத் தொழிலாளா்கள் அனைவருக்கும் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 9, 23, 29 ஆகிய தேதிகளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். விடுப்பு வழங்காத நிறுவன உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுதொடா்பான புகாா்களை கீழ்காணும் எண்களைத் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

மதுரை - 9655344382, 9865818636, 9486365149, விருதுநகா் - 9943167435, 9159443377, 9865390006, ராமநாதபுரம் - 9600183368, 9600713835, 9443497670, சிவகங்கை - 6383573843, 6369117062, 9087000438.