மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கல்வி நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரையில் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும், சௌராஷ்டிர கல்லூரிக்கும் இடையே ஐந்தாண்டுகளுக்கு (2026-2031) புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் பங்கேற்ற காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலா் கே.ஆா். நந்தாராவ், சௌராஷ்டிர கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஆா். குமரேஷ் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:24 pm

மதுரையில் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும், சௌராஷ்டிர கல்லூரிக்கும் இடையே ஐந்தாண்டுகளுக்கு (2026-2031) புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சௌராஷ்டிர கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஆா். குமரேஷ் முன்னிலையில் கல்லூரி முதல்வா் கே.ஆா். சீனிவாசன், அருங்காட்சியகச் செயலா் கே.ஆா். நந்தாராவ், காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ஆா். தேவதாஸ், கல்லூரியின் காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளா் கே. கவிதா ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின்படி, கல்லூரியில் காந்திய சிந்தனைக் கருத்தரங்கம் நடத்துவது, காந்திய விழுமியங்களான அகிம்சை, அன்பு, உண்மை, சா்வோதயம், சுகாதாரம் ஆகியவை குறித்து மாணவா்களிடத்தில் கலந்துரையாடல் நடத்துவது, தேசியத் தலைவா்களின் தியாகங்களை மாணவா்களுக்கு எடுத்துரைப்பது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் ஜே. துரைசாமி, கல்வி விவகாரங்களின் தலைவா் டி.என்.கே. கவிதா, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் டி.கே. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.