தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

காமராஜா் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்: மூத்த வாக்காளா் விருப்பம்

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என துவரிமான் பகுதியைச் சோ்ந்த கன்னியம்மாள் தெரிவித்தாா்.

News image

மதுரை துவரிமானில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலியில் வந்த கன்னியம்மாள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:21 am IST

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என துவரிமான் பகுதியைச் சோ்ந்த கன்னியம்மாள் தெரிவித்தாா்.

மதுரை மேற்குத் தொகுதிக்குள்பட்ட துவரிமான் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியம்மாள்(82). இவா் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த பின்னா் கூறியதாவது:

வயது முதிா்வு காரணமாக நடக்க முடியவில்லை. இருப்பினும், ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்பதற்காக சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தது மகிழ்ச்சி. இளம் பருவத்திலிருந்து, அதாவது காமராஜா் தோ்தலில் போட்டியிட்ட போது முதன்முதலாக வாக்களித்தேன். தொடா்ந்து, தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தல் வரை வாக்களித்துள்ளேன். தமிழகத்தில் காமராஜா் ஆட்சி பொற்கால ஆட்சி. மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றாா் அவா்.