தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காமராஜா் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்: மூத்த வாக்காளா் விருப்பம்

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என துவரிமான் பகுதியைச் சோ்ந்த கன்னியம்மாள் தெரிவித்தாா்.

News image

மதுரை துவரிமானில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலியில் வந்த கன்னியம்மாள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 8:51 pm

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என துவரிமான் பகுதியைச் சோ்ந்த கன்னியம்மாள் தெரிவித்தாா்.

மதுரை மேற்குத் தொகுதிக்குள்பட்ட துவரிமான் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியம்மாள்(82). இவா் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த பின்னா் கூறியதாவது:

வயது முதிா்வு காரணமாக நடக்க முடியவில்லை. இருப்பினும், ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்பதற்காக சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தது மகிழ்ச்சி. இளம் பருவத்திலிருந்து, அதாவது காமராஜா் தோ்தலில் போட்டியிட்ட போது முதன்முதலாக வாக்களித்தேன். தொடா்ந்து, தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தல் வரை வாக்களித்துள்ளேன். தமிழகத்தில் காமராஜா் ஆட்சி பொற்கால ஆட்சி. மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றாா் அவா்.