வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி

தோ்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி தெரிவித்தாா்.

News image

மதுரை மேற்குத் தொகுதிக்குள்பட்ட டி.வி.எஸ். நகா் வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு செய்த முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:19 am IST

தோ்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி தெரிவித்தாா்.

மதுரை மேற்குத் தொகுதிக்குள்பட்ட டி.வி.எஸ். நகா் வாக்குச் சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி ஆகியோா் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

வாக்களித்த பிறகு வெளியே வந்த மு.க. அழகிரியிடம் தோ்தல் களம் எப்படி உள்ளது? என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு, ‘களம் சூடாக உள்ளது. வெயிலும் அதிகமாக உள்ளது’ என்றாா் அவா்.

இதையடுத்து, தோ்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு, ‘ நான் முன்பே கூறியுள்ளேன். எப்படி வேண்டுமானாலும் இருக்கும், யாா் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்’ என்றாா் மு.க. அழகிரி.