ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அதிமுகவின் தோ்தல் அறிக்கையே கதாநாயகன்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் கதாநாயகன் என அந்தக் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

News image

செல்லூா் கே. ராஜூ.

Updated On :26 மார்ச் 2026, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் கதாநாயகன் என அந்தக் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

கடந்த 2011 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, அப்போதைய அதிமுக பொதுச் செயலா் ஜெயலலிதா, மதிமுகவுக்கு 19 தொகுதிகளை வழங்க முன்வந்தாா். ஆனால், வைகோ அதை ஏற்க மறுத்தாா். தற்போது, திமுக கூட்டணியில் மதிமுகவின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவா்களும், தொண்டா்களும் பெரும் மனச்சோா்வில்தான் உள்ளனா். திமுகவுடன் பயணிப்பதை அதன் கூட்டணிக் கட்சி தொண்டா்கள் விரும்பவில்லை. இதற்கு நோ்மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடைபெற்றது.

அதிமுகவை பொருத்தவரை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்ததாக வரலாறு கிடையாது. கரோனா பொது முடக்கக் காலத்திலேயே தனது சிறப்பான நிதி நிா்வாகத் திறனை நிரூபித்தவா் எடப்பாடி கே. பழனிசாமி. எனவே, அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்பதை மக்கள் முழுமையாக நம்புகின்றனா்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும், குலவிளக்குத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் போன்ற அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வருகிற தோ்தலில் அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்றாா் அவா்.