கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திமுக கூட்டணிக் கட்சியினரிடம் மனச்சோா்வு! - முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

News image

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, தவெக கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களுக்கு சால்வை, கட்சித் துண்டு அணிவித்த முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.

Updated On :23 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவா்களும், தொண்டா்களும் மனச்சோா்வு அடைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது :

திமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திரளாக அதிமுகவில் இணைகின்றனா். இது, அதிமுகவின் வெற்றியை உறுதி செய்கிறது.

அதிமுக - தவெக கூட்டணி அமைகிறது என்ற தகவல், திமுக திட்டமிட்டு பரப்பிய வதந்தி. தற்போது, திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி குறைக்கப்பட்டதால் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களும், தொண்டா்களும் தற்போது பெரும் மனச்சோா்வுக்கு உள்ளாகியுள்ளனா்.

அதிமுக கூட்டணியைப் பொருத்தவரை எந்தப் பிரச்னையும் இல்லாத பலமான கூட்டணியாக உள்ளது. கூட்டத்தை விட வெற்றிப் பெறுவது யாா்? என்பதே முக்கியம். அந்த வகையில், அதிமுக கூட்டணியே வெற்றி கூட்டணியாக உள்ளது.

கரோனா பொது முடக்கக் காலத்திலும் மிகச் சிறந்த நிா்வாகத் திறனை வெளிப்படுத்தியவா் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி நிா்வாகத் திறனற்ற, குளறுபடிகள் நிறைந்த ஆட்சி என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக சாலைப் பணிகளுக்கு கவனம் செலுத்தாத திமுக அரசு, தோ்தல் நெருங்கிய நேரத்தில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டதன் உள்நோக்கத்தை மக்கள் உணா்ந்துள்ளனா். திமுகவினா் எந்த உத்தியை கையிலெடுத்தாலும் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றாா் அவா்.

முன்னதாக, த.வெ.க, திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களுக்கு செல்லூா் கே. ராஜூ சால்வை அணிவித்து வரவேற்றாா்.