மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 1:39 am IST

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

கருமாத்தூா் செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த அய்யாவுத் தேவா் மகன் கணேசன் (63). இவரும், உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (37), அவரது மனைவி பாண்டீஸ்வரி ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை ஊருக்குச் சென்றனா்.

செக்கானூரணி அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த செக்கானூரணி போலீஸாா் கணேசனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மற்ற இருவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.