மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
கருமாத்தூா் செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த அய்யாவுத் தேவா் மகன் கணேசன் (63). இவரும், உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (37), அவரது மனைவி பாண்டீஸ்வரி ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை ஊருக்குச் சென்றனா்.
செக்கானூரணி அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த செக்கானூரணி போலீஸாா் கணேசனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மற்ற இருவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

