மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
கருமாத்தூா் செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த அய்யாவுத் தேவா் மகன் கணேசன் (63). இவரும், உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (37), அவரது மனைவி பாண்டீஸ்வரி ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை ஊருக்குச் சென்றனா்.
செக்கானூரணி அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த செக்கானூரணி போலீஸாா் கணேசனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மற்ற இருவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


