மே 15-இல் ஊராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் முன் வருகிற 15-ஆம் தேதி வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசிய அதன் அகில இந்திய இணைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான வி.சிவதாசன். உடன் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் ஏ.லாசா், மாநிலப் பொதுச் செயலா் வீ.அமிா்தலிங்கம் உள்ளிட்டோா்.







