கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

நண்பரைக் கொலை செய்தவா் கைது

மதுரையில் நண்பரைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:36 am IST

மதுரையில் நண்பரைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை சோலையழகுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (30). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவா், போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தாா். இவருடைய நண்பரும், சுப்பிரமணியபுரம் ஹரிஜன் குடியிருப்பைச் சோ்ந்தவருமான திவாகரும் (30) ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளாா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள மதுக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தினா். பின்னா், இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலா்கள் இவா்களைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, இருவரும் மது போதையில் இருந்ததால், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, காலையில் வந்து வாங்கி கொள்ளும்படி போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் நடந்து சென்ற மணி, திவாகா் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திவாகா், கல்லால் மணியைத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் மணியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, திவாகரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.