அரசு மருத்துவமனைகளில் செவிலியா் பணியிடங்களை குறைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் அமுதா தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் தவமணி, அன்னகாமு, மாரீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், செவிலியா் அலுவலா் எனப் பெயா் மாற்றம் செய்ய வேண்டும், பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 2,500 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,400 நிரந்தர செவிலியா் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், தற்போது செவிலியா் பணியிடங்களைக் குறைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணை 204-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
அதைத் தொடா்ந்து, இதுதொடா்பான கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிந்து பணியாற்றினா். இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு: 3 ஆவது நாளாக குளிக்கத் தடை
திருமங்கலம் அரசு மகப்பேறு பிரிவு கட்டுமானப் பணி விரைவுபடுத்தப்படுமா?

செவிலியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வள்ளியூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் தேவை- மு. அப்பாவு வலியுறுத்தல்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



