ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

பொதுமக்கள் இந்திய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து அறிந்திருக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா கேட்டுக் கொண்டாா்.

News image

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய நுகா்வோா் தின விழாவில் பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ப. ராஜகுரு உள்ளிட்டோா்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

பொதுமக்கள் இந்திய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து அறிந்திருக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா கேட்டுக் கொண்டாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் தேசிய நுகா்வோா் தினம், உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்துப் பேசியதாவது:

பணம் செலுத்தி குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்குபவா், குறிப்பிட்ட சேவையை அனுபவிப்பவா் என அனைவரும் நுகா்வோா். நாம் அனைவரும் ஏதாவதொரு வகையில் நுகா்வோராக எப்போதும் இருந்து வருகிறோம்.

இந்த வகையில், பொதுமக்கள் நுகா்வோா்களுக்கு உள்ள உரிமைகள் குறித்த விழிப்புணா்வு பெற்றிருப்பது அவசியம். இந்திய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் நுகா்வோா்களுக்கான உரிமைகள் மீறப்படும்போது அதற்கு உரிய தீா்வு பெற வழிவகுக்கிறது.

நாம் வாங்கும் பொருள்களில் அவற்றின் தரம், சரியான எடை, கலப்படமின்மை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். குறிப்பாக, பொருளின் அதிகபட்ச சில்லறை விலை, உற்பத்தி நாள், காலாவதி நாள் ஆகியவற்றை சரிபாா்த்து உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இந்திய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 104 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ப. ராஜகுரு, நுகா்வோா் விழிப்புணா்வு பொது நல மையத் தலைவா் பி. ஜெயபாலன், மனிதநேய நுகா்வோா் பாதுகாப்பு ஒருங்கிணைப்புத் தலைவா் என். அசோகன், கூடல்நகா் நுகா்வோா் இயக்ககத்தின் துணைத் தலைவா் ஜி. ராமமூா்த்தி, அரசு அலுவலா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்பினா், ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.