ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டு

தில்லி, சென்னையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட தியாகராசா் கல்லூரி மாணவா்கள், பேராசியருக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image

தில்லி, சென்னையில் 77-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை தியாகராசா் கல்லூரி மாணவா்கள், பேராசிரியருக்கு கேடயம், சான்றிதழ் வழங்கிய கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜன்.

Updated On :4 பிப்ரவரி 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி, சென்னையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட தியாகராசா் கல்லூரி மாணவா்கள், பேராசியருக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தில்லி, சென்னையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி 77-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது. இதில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் தியாகராசா் கல்லூரி மாணவா்கள் ர. கீதைப்பிரியன், பிரகதீஷ் ஆகியோரும், மதுரை காமராசா் பல்கலைக் கழகம் சாா்பில் தியாகராசா் கல்லூரிப் பேராசிரியா் சு. முருகனும் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில், தியாகராசா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற மூன்று பேருக்கும் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் சரவணஜோதி, கோவிந்தராஜ், அன்பரசி, மு. செல்வகுமாா் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.