சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

காா் மோதியதில் அரசு வழக்குரைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற அரசு வழக்குரைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற அரசு வழக்குரைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா் சித்தாா்த்தன் (52). அரசு வழக்குரைஞரான இவா், சனிக்கிழமை மதுரையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். மேலூா் அருகேயுள்ள தெற்குத் தெரு மேம்பாலம் அருகே சென்றபோது, மதிமுக பொதுச் செயலா் வைகோவின் நடைபயணத்தை காண்பதற்காக அவா் காரிலிருந்து இறங்கி சாலையைக் கடந்து நடந்து சென்றாா்.

பிறகு, அங்கிருந்து மீண்டும் சாலையைக் கடக்க முயன்றபோது, மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற காா் சித்தாா்த்தன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.