காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கைவிடப்பட்ட குவாரிகள் விவகாரம்: நெல்லை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளை சீரமைத்து, வேலி அமைக்கக் கோரிய மனு தொடா்பாக அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க மதுரை அமா்வு உத்தரவு

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளை சீரமைத்து, வேலி அமைக்கக் கோரிய மனு தொடா்பாக அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துராமன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளில் மழை நீா் தேங்கி நிற்பதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

மனிதா்கள், கால்நடைகள் இந்தக் குழிகளில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. குவாரிகளுக்கு குத்தகை உரிமை வழங்கும்போது 10 சதவீத பசுமை நிதி வசூலிக்கப்படுகிறது. இந்த நிதியை குவாரிகளை சீரமைக்கவும், குவாரிகளை சுற்றி வேலி அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகள் எத்தனை?

குவாரிகளை நடத்த உரிமம் பெற்றவா்களில் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்யத் தவறியவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வருகிற 23-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.