பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கமான செந்தமிழ் கல்லூரி, பனகல் சாலை, உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை: திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கமான செந்தமிழ் கல்லூரி, பனகல் சாலை, உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி பாண்டியன் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்ச் சங்கத்தின் செயலா் ச. மாரியப்பமுரளி தலைமை வகித்து, அங்கிருந்த திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, பனகல் சாலையில் உள்ள திருவள்ளுவா் சிலை, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு தமிழ் அமைப்பினா், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.