எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜல்லிக்கட்டில் காயமடைந்த பாா்வையாளா் உயிரிழப்பு

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மேல அனுப்பானடி டிஎன்எச்பி குடியிருப்பைச் சோ்ந்த வேலுசாமி மகன் செல்வராஜ் (68). இவா் கடந்த வெள்ளிக்கிழமை பாலமேட்டில் நடைெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைப் பாா்க்கச் சென்ற போது, காளை முட்டியதில் பலத்த காயமடைந்தாா்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.