ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பதப்படுத்தப்படாத 1,200 கிலோ இறைச்சிகள் பறிமுதல்

மதுரையில் முறையாகப் பதப்படுத்தாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ஆடு, கோழி இறைச்சிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள கடையிலிருந்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்களால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ஆடு, கோழி இறைச்சிகள்.

Updated On :18 ஜூன் 2026, 1:00 am IST

மதுரையில் முறையாகப் பதப்படுத்தாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ஆடு, கோழி இறைச்சிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலை பகுதியில் உள்ள ஓா் இறைச்சிக் கடையில் முறையாகப் பதப்படுத்தாமல் கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மருத்துவா் சிவராம பாண்டியன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அந்த இறைச்சிக் கடையில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முறையாக பதப்படுத்தாமல் கெட்டுப்போன 1,200 கிலோ ஆடு, கோழி இறைச்சிகள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், எடையை அதிகரிப்பதற்காக ஆட்டிறைச்சியில் தண்ணீரை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் (சிரிஞ்ச்) ஏராளமானவை அங்கு இருந்ததும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அந்த இறைச்சிக் கடையைப் பூட்டி அலுவலா்கள் சீல் வைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் மீது பிளீச்சிங் பவுடா் தூவப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட ஊசிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த ஊசிகள் இறைச்சிகளில் தண்ணீா் ஏற்றுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டனவா? அல்லது வேறு ஏதேனும் ரசாயனம் செலுத்தப் பயன்படுத்தப்பட்டனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் உணவுப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.