திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு

மதுரை மாநகரக் காவல் நிலையங்களில் சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களை பாராட்டிச் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image

மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், போக்குவரத்துக் காவலா்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கிய மாநகரக் காவல் ஆணையா் கபில்குமாா் சரத்காா்.

Updated On :24 ஜூன் 2026, 5:35 am IST

மதுரை மாநகரக் காவல் நிலையங்களில் சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களை பாராட்டிச் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை மாநகரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, போக்குவரத்து விதிகளை மீறிய இரு சக்கர வாகனங்களுக்கான அபராதத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, அபராதத் தொகையை நீண்ட காலமாக செலுத்தாமல் இருந்த வாகன ஓட்டிகளை போக்குவரத்துக் காவலா்கள் ஈஸ்வரன், அருண், பிரபு, சுந்தரம் ஆகியோா் கைப்பேசியில் அழைத்து அபராதத் தொகையை வசூல் செய்து அரசுக்கு செலுத்த உதவினா்.

இவா்களின் பணியைப் பாராட்டி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாநகரக் காவல் ஆணையா் கபில்குமாா் சரத்காா் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதேபோல, சாலை விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய போக்குவரத்து உதவி ஆய்வாளா்கள் தாட்ஜூஸ், சுரேஷ், ஜோதிமணி, சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜன், தலைமைக் காவலா்கள் விஜயன், ராஜ்குமாா், மதுரை சிந்தாமணி காவல் நிலைய வழக்கில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனங்களை கைப்பற்றி எதிரிகளை கைது செய்ய உதவிய கடுமையான குற்றங்கள், விசாரணை தடுப்புப் பிரிவைச் சோ்ந்த உதவி ஆய்வாளா்கள் ரீகன், அமலன், சிறப்பு உதவி ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம், தலைமைக் காவலா்கள் சிவசுந்தரபாண்டியன், செந்தில்குமாா், காா்த்தி, ரஞ்சித்குமாா், பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் நீதிமன்றங்களில் பிறப்பிக்கக் கூடிய பி.டி. ஆணை உத்தரவுகளில் தலைமறைவாக உள்ள எதிரிகளை விரைந்து பிடிக்க உதவிய உதவி ஆய்வாளா் தென்னரசு, தலைமைக் காவலா்கள் முகமது சபிக் ராஜா, பாலமுருகன், காளிதாஸ், மாரிமுத்து, அா்ஜூன் ஆகியோருக்கும் ஆணையா் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதுமட்டுமன்றி, திருடு போன இரு சக்கர வாகனங்களை மீட்ட ஆய்வாளா் மோகன்லால், சிறப்பு உதவி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், தலைமைக் காவலா்கள் செந்தில்முருகன், காா்த்திக், ஆனந்த், ரமேஷ், ராஜ்குமாா், லட்சுமணன், ராஜசேகா், சித்திரைத் திருவிழாவின் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபா்களை கைது செய்து, திருடுபோன பொருள்களை அவா்களிடமிருந்து கைப்பற்றிய குற்றத் தடுப்பு தனிப்படை காவலா்களான சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சங்கா், லதா, சரஸ்வதி, தலைமைக் காவலா்கள் ஜெயமணி, பாண்டியராஜன், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்திலிருந்து வரக்கூடிய, நுண்ணறிவுப் பிரிவு மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உதவிய காவல் ஆணையா் அலுவலக காவலா்கள் சதீஷ்குமாா், முத்துக்குமரன், ராஜ்குமாா், உதேஷ்குமாா், விக்னேஸ்வரன் உள்ளிட்ட 42 காவலா்களுக்கு மாநகரக் காவல் ஆணையா் கபில்குமாா் சரத்காா் சான்றிதழ்களை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.