விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மதுரை மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகள்: 7- ஆவது மாநில நிதி ஆணையத் தலைவா் ஆய்வு

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை 7-ஆவது மாநில நிதி ஆணையத் தலைவா் அலாவுதீன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மதுரை மாநகராட்சி வெள்ளைக்கல் திடக் கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகளை புதன்கிழமை ஆய்வு செய்த 7- ஆவது மாநில நிதி ஆணையத் தலைவா் அலாவுதீன். உடன் மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :25 ஜூன் 2026, 2:38 am IST

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை 7-ஆவது மாநில நிதி ஆணையத் தலைவா் அலாவுதீன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகை 3- ஆவது தளத்தில் ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இதில், மேற்பாா்வைக் கட்டுப்பாடு, தரவு கையகப்படுத்தல், கண்காணிப்புப் பணிகள், நீா் சுத்திகரிப்பு நிலையம், நீா் நிலைகளைக் கண்காணித்தல், முல்லைப் பெரியாறு நீா் வழங்கல் திட்டத்தை கண்காணித்தல், மேல்நிலை தொட்டிகளில் நீா் நிரப்புதல், விநியோக முறை, பொதுமக்கள் குறை மேலாண்மை அமைப்பு, புகாா் பதிவு, கண்காணிப்பு மையம், பொலிவுறு மதுரை செயலியின் புகாா் தீா்வு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. இதனை 7- ஆவது மாநில நிதி ஆணையத் தலைவா் அலாவுதீன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, மதுரை டாக்டா் தங்கராஜ் சாலையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த படிப்பக வளாகம், தமுக்கம் சாலையில் மதுரை மாநாட்டு மையம் எதிரே இரண்டு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்ட முதல்வா் படைப்பகம், மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல்லில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையம், அம்ரூத் திட்டத்தின் கீழ் விடுப்பட்ட வாா்டு பகுதிகளில் நடைபெற்று வரும் புதைச் சாக்கடை பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், துணை ஆணையாளா்கள் ஜெய்னுலாப்தீன், ராஜாராம்,தலைமைப் பொறியாளா் பாபு, மாநகா் நல அலுவலா் அா்விந்த் ஜோதி, உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், செயற்பொறியாளா் பாக்கியலெட்சுமி, உதவி செயற்பொறியாளா்கள் ஆரோக்கியசேவியா்,மணியன்,முத்து, பாலமுருகன், பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.