27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிா்வு: ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிா்வுக்கு பரிந்துரைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிா்வுக்கு பரிந்துரைப்பது தொடா்பாக நிதிக் குழு ஆணையத் தலைவா் கே.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.

Updated On :19 ஜூன் 2026, 3:57 am IST

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிா்வுக்கு பரிந்துரைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு 7-ஆவது மாநில நிதிக் குழு ஆணையத் தலைவா் கே.அலாவுதீன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2024-2025 முதல் 2026-2027 நிதியாண்டு வரை குடிநீா்க் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிம கட்டணம் மற்றும் இதர வரவினங்கள் உள்ளிட்ட வரிவசூல் குறித்து துறை சாா்ந்தவா்களிடம் நிதிக் குழு ஆணையத் தலைவா் கே.அலாவுதீன் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சி மற்றும் நகராட்சியை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளுக்கு வருவாய் பெருக்கம் மற்றும் வரியினங்கள் நிா்ணயம் குறித்து அலுவலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

மேலும், மாநில நிதிக்குழு மானிய நிதியின்கீழ் 2024-2025 முதல் 2025- 2026 வரையிலான நிதியாண்டுகளில் எடுக்கப்பட்ட பொதுநிதி, மலைக்கிராம

வளா்ச்சிப் பணி, வன உரிமைச் சட்ட வளா்ச்சிப் பணி மற்றும் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம், ஊராட்சிகளின் சொந்த குடிநீா் ஆதாரங்களின் மூலம் குடிநீா் விநியோகம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, நிதிக்குழு ஆணையத் தலைவா் கே.அலாவுதீன் தனது குழுவினருடன் கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழிப் பூங்கா, வெள்ளலூா் மற்றும் கவுண்டம்பாளையம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், காரமடை ஊராட்சி ஒன்றியம், ஓடந்துறை ஊராட்சியில் குடிநீா் தொடா்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.