மதுரை மாநகரக் காவல் ஆணையராக எஸ். ராஜேந்திரன்(படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருப்பூா் மாநகரக் காவல் ஆணையராக பணியாற்றிய எஸ். ராஜேந்திரன், மதுரை மாநகரக் காவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
கடந்த 1998-ஆம் ஆண்டு குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று, காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றாா். தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா், சென்னை மாநகர பூக்கடை பகுதி துணை ஆணையா், மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா், நெல்லை மாநகரக் காவல் ஆணையராகவும் பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



_.jpeg?w=256&q=65&auto=format%2Ccompress&fit=max)






